என்செய லாவது’ யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே
Wednesday, June 29, 2022
பட்டினத்தார் -பாடல் - தீவினை
Friday, June 24, 2022
இயற்கை எழில்கொஞ்சம் இந்தியா
இயற்கை வளம் கொஞ்சும் இந்தியா
"""""""''"'""""""""""""""'''''''””""""''''""'"""""""""'
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...
என்று பாடினார் கவிஞர் மருதகாசி.இது கற்பனை வரிகள் அல்ல.சத்திய வரிகள்.
ஆம் இந்தியா என்றாலே இயற்கை வளம் கொஞ்சம் பூமிதான்! அதனால் தான் மகாகவி பாரதியார் /"பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு" என்று பெருமை பொங்க பாடினார்.
.வடக்கே இமயமலை ,தெற்கே இந்தியெருங்கடல் ,மேற்கே அரபிக் கடல் ,கிழக்கே வங்காள விரிகுடா என இயற்கையே இந்தியாவுக்கு அரண்களாக உள்ளது.உலகில் வேறு எந்த நாட்டுக்கும் இத்தகு சிறப்பு கிடையாது.
தமிழ்நாட்டில் தாமிரபரணி - வைகை கர்நாடகாவில் காவிரி..ஆந்திராவில் கோதாவரி , கிருஷ்ணா வடக்கே சென்றால்ஒரிசாவில் மகாநதி, மத்திய பிரதேசத்தில் நர்மதா, மராட்டியத்தில் தபதி, உத்தர பிரதேசத்தில் கங்கா , டெல்லியில் யமுனா, ஒரிசாவில் மகாநதி காஷ்மீரில் சிந்து, அஸ்ஸாமில் , பிரம்மபுத்திராஅப்பப்பா எத்தனை நதிகள் எத்தனை நதிகள்.உலகிலேயே அதிக நதிகளும் ஏரிகளும் குளங்களும் உள்ள தேசம் இந்தியா தான்.
தின்னத் தின்ன தெவிட்டாத ஆயிரக்கணக்கான பழவகைகளும் ,கணக்கிலடங்காத காய்கறி வகைகளும் ,எண்ணமுடியாத தானிய வகைகளும் இம்மண்ணில் உண்டு.
மலைவளம் ,மண் வளம், நீர் வளம் ,நில வளம்என இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் புண்ணிய பூமி தான் பாரத பூமி.
அதிலும் இயற்கை வளத்தை பேணுவதிலும் பெருக்குவதிலும் தமிழன் முன்னோடியாக திகழ்ந்தான் என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழன் கட்டிய கல்லணை இன்னும் கட்டியம் கூறுகின்றது.
இன்று மென்பொருள் பூங்காவாக திகழும் சிங்காரச் சென்னை ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான ஏரிகளும் குளங்களும் நிறைந்த விவசாய பூமி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
என் போன்ற குழந்தைகளை கனவு காண சொன்ன ஏவுகணை நாயகன் அப்துல்கலாம் அறிவியல் மேதை மட்டுமல்ல; அவர் ஒரு இயற்கை காதலர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அவர் தொடங்கி வைத்த மரம் நடும் இயக்கம் இன்று பல கோடானுகோடி விதைகளை இம்மண்ணில் விதைத்துள்ளது.
ஆம் விதைத்தவர் தூங்கலாம் விதைகள் தூங்குவதில்லை. மனிதர்கள் இல்லாமல் மரங்கள் ஆல் வாழ முடியும் ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது என்பதை நாம் என்றும் நினைவில் நிறுத்த வேண்டும்.
இன்று உயர்ந்து நிற்கும் மரமெல்லாம் என்றோ ஒரு நாள் விதைகளாக மண்ணில் விழுந்த வையே!நாமும் மரம் நடுவோம் இயற்கை வளத்தை காப்போம் -பாரதத்தை பசுமை தேசம் ஆக்குவோம் .இந்திய தேசத்தை வளம் கொழிக்கச் செய்வோம் நன்றி வணக்கம்.
பசுமை பாரதம்,' தூய்மை இந்தியா
. தூய்மை பாரதம்.. பசுமை பாரதம்
தூய்மை என்பது வீட்டில் வேண்டும்
தூய்மை என்பது நாட்டில் வேண்டும்
தூய்மை என்பது உலகுக்கு வேண்டும்
தூய்மை என்பது எங்கும் வேண்டும்
எப்போதும் வேண்டும்..!.
எங்கு தூய்மை இருக்கிறதோ அங்கு இறைவன் இருப்பான்.
அதனால் தான் நம் முன்னோர்கள் "சுத்தம் வீட்டைக் காக்கும் சுகாதாரம் நாட்டைக் காக்கும்""என்றனர்.அப்பொன்மொழிக்கு ஏற்ப மகாத்மா காந்தியின் கனவான தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
நவீன பாரதத்தின் பன்னோக்கு வளர்ச்சிப் பரிமாணங்களில் முதன்மையாகக் கருதப்படுவது தூய்மை மற்றும் பசுமை.
இயற்கை அன்னை வாரி கொடுத்து கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம் நிறைந்த தன்னிகரற்ற நாடாக திகழ்கிறது நம் பாரதம். வடக்கே உயர்ந்து நிற்கும் இமயமலை |தெற்கே பசுமை படர்ந்து கிடக்கும் பொதிகை மலை இரண்டுக்குமிடையே ஆயிரமாயிரம் நதிகள், ,குளங்கள் ,ஏரிகள் என இயற்கை அழகு கொலுவீற்றிருக்கும் தேசம் நம்தேசம்.
ஆனால் ,இன்றோ ஆற்று மணல்கள் திருடப்பட்டன .கற்பாறைகள் களவாடப்பட்டன. ஏரிகளும் குளங்களும் இருந்த இடங்கள் மூடப்பட்டன அவையிருந்த இடங்களில் வான் முட்டும் கட்டிடங்கள் வளர்ந்து நிற்கின்றன..இப்படியே தொடர்ந்தாள் எதிர்கால மனித குலம் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும். நாம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.
கடல் வளம் ,கனிம வளம், மண் வளம் ,மலை வளம், மனிதவளம் |அறிவியல் வளம் ,ஆன்மீக வளம்,என அனைத்து வளத்திலும் சிறந்த நாம் ,அவற்றை வீணடிக்காமல் அவற்றைக் பாதுகாக்க சபதம் ஏற்போம். ."பொதுச்சொத்து என்பது பொறம்போக்கு அல்ல; அது பொதுமக்களாகிய நம்முடைய சொத்து".என்ற உணர்வு . ஒவ்வொரு குடிமகனுக்கும் வரவேண்டும் .அதற்காக உருவாக்கப்பட்டது தான் பசுமை இந்தியா இயக்கம்.
பசுமை மற்றும் தூய்மையில் அரசின் பல்வேறு முயற்சிகளால் மெச்சத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். சுகாதாரம் மற்றும் கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு பாமர மக்களிடம் கொண்டு சேர்க்கப் பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆடம்பரமாக கருதப்பட்ட கழிவறை அத்தியாவசியமாக மாறிவிட்டது.
தூய்மை பசுமை குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் பள்ளி மாணவர்களின் பங்கு மகத்தானது. புதிய பாரதத்தை இளைஞர்களே கட்டமைக்க முடியும் . அதனால்தான் மகாகவி பாரதியார்
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களி படைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆம் என் மாணவ தோழர்களே! வாருங்கள்
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்
ஆசைக்கொரு மரம் வளர்ப்போம்
பேருக் கொரு மரம் வளர்ப்போம்
ஊருக்கொரு மரம் வளர்ப்போம்'
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்
நாட்டுக்காக மரம் வளர்ப்போம்
மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழும் ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது..என்பதை என்றும் நம் நினைவில் நிறுத்துவோம்.
மண் பயனுற வேண்டும்
மக்கள் நலம் பெற வேண்டும்
நாடு செழிப்புற வேண்டும்
நாம் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் !
வாழ்க தமிழ் வெல்க பாரதம். '