Sunday, September 26, 2021

நோயுற்று. அட ராமல.

 


திருப்போரூர் கந்தசாமி யிடம் சிதம்பர சுவாமிகள் வேண்டியது..…

"""''''''''''''''''''''''''''''''''''''''''''

நோயுற்று அடராமல் நொந்து மனம் வாடாமல் 

பாயிற் கிடவாமல் பாவியேன் -காயத்தை 

ஓர்நொடிக்குள் நீக்கியெனை ஒண் போரூர் ஐயாநின்

சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து .

     -திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

Saturday, September 18, 2021

தமிழ்ச் சொல்வளம் பயிற்சி வினாக்கள்

                        பத்தாம் வகுப்பு

                        தமிழ்ச்சொல் வளம்

 பின்வரும் பலவுள்  தெரிவு வினாக்களுக்கு விடை எழுது

1,.நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர்

 அ) பாரதிதாசன்   ஆ) பாரதியார்   இ) கவிமணி   ஈ) தேவநேயப்பாவாணர் 


2.இலக்கிய செம்மொழிகளுக்குப்  பொதுவானது 

 அ) சொல் வளம்   ஆ) பொருள் வளம்  இ) கற்பனைவளம்  ஈ) உவமை 


3.தமிழ்  அல்லாத  திராவிட மொழிகளில்  இல்லாதது.

 அ) பன்மொழி   ஆ)இலக்கணம்   இ) ஒரு பொருட் பல சொல்   ஈ) இலக்கியம்


4. கால்டுவெல் எழுதிய நூல்

அ) கனிச்சாறு   ஆ) கண்ணகி காப்பியம்  இ) திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்

ஈ) கண்ணகி புரட்சிக் காப்பியம்


5.நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடி பகுதியைக் குறிப்பது

 அ) தண்டு ஆ) கோல் இ) தூறு  ஈ) தாள் 


6.தட்டு அல்லது தட்டை என்பது -----------தாவரத்தின் அடிப்பகுதியை குறிக்கும்.

அ) கரும்பு   ஆ) புளி ,வேம்பு  இ) கீரை ,வாழை  ஈ) கம்பு ,சோளம் 


7.சினையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும் ?

 அ) போத்து   ஆ) கொப்பு  இ) குச்சி ஈ) இணுக்கு


8.வெங்கழி  என்பது 

 அ) காய்ந்த குச்சி  ஆ) காய்ந்த சிறுகிளை  இ) காய்ந்த கழி  ஈ) காய்ந்த கொம்பும் கவையும் 

அடியும்


9. சோளம் ,கரும்பு  முதலியவற்றின் இலை

 அ) தோகை  ஆ) இலை  இ) தாள்  ஈ) சண்டு 


10.பூ விரியத் தொடங்கும் நிலை

 அ) அரும்பு   ஆ) போது  இ) வீ  ஈ) செம்மல்


 11. தமிழ் திரு. இரா. இளங்குமரனார் உருவாக்கியது ------------

  அ) திருவள்ளுவர் நூலகம்   ஆ) கம்பர் நூலகம்    இ) பாவாணர் நூலகம்    ஈ) இளங்கோ நூலகம்


12.கோல்  என்பது------------ பெயர்.

 அ) கிளைப்பிரிவு    ஆ) இலை வகை   இ) அடி வகை  ஈ) கொழுந்து வகை 


13.கரும்பின் அடி -----------

 அ) கழி   ஆ) கழை   இ) அடி   ஈ) தட்டு


14. இணுக்கு  என்பது -----------

 அ) கவையின் பிரிவு    ஆ) சினையின் பிரிவு   இ) போத்தின் பிரிவு  ஈ) குச்சியின் பிரிவு


15.காய்ந்த கொம்பும், கவையும் அடியும்-------

 அ) சுள்ளி   ஆ) கட்டை   இ) விறகு   ஈ) வெங்கழி


16.செம்மல்  என்பது ---------

 அ) அரும்பு   ஆ) செடியின் கிளை   இ) பூ வாடின நிலை   ஈ) பூவின் தோற்ற நிலை 


17.கரும்பின் நுனிப்பகுதி---------

 அ) துளிர்    ஆ) கொழுந்தடை  இ) குருத்து  ஈ) முறி 


18.தாவரங்களின் இலை வகைகளை குறிக்கும்  சொற்களுள்  பொருந்தாத ஒன்று--------

அ) தாள்  ஆ) ஓலை  இ) சருகு  ஈ) தளிர்


19. தண்டு என்பது ---------அடி.

 அ) நெல் ,கேழ்வரகு  ஆ) நெட்டி ,மிளகாய்   இ) கீரை, வாழை   ஈ) புளி ,வேம்பு 


20. இளங்குமரனார் எழுதிய நூல்களுள் ஒன்று .

 அ) சிலப்பதிகார உரை  ஆ) குண்டலகேசி உரை  இ) மணிமேகலை உரை    ஈ)சீவகசிந்தாமணி உரை

Friday, September 17, 2021

வல்லினம் மிகும் இடங்கள்

 வல்லினம் மிகும் இடங்கள்


இரண்டு சொற்களுக்கு இடையில் எங்கெல்லாம் க், ச், த், ப் ஆகிய வல்லெழுத்துக்கள் வருமோ அவ்விடங்களை வல்லினம் மிகும் இடம் என்று அழைக்கின்றோம் வல்லெழுத்து வர வேண்டிய இடங்களில் வல்லொற்று இடவில்லை என்றால் பொருளே மாறிவிடும்

எடுத்துக்காட்டாக கீழே உள்ள தொடரைப் பாருங்கள்....


குறிஞ்சி     பள்ளி

குறிஞ்சிப்பள்ளி

குறிஞ்சிப் பள்ளி

மேற்கண்ட மூன்று தொடர்களும் ஒரே போல் இருந்தாலும் மூன்றும் வெவ்வேறு பொருளைத் தருகின்றது.

i) குறிஞ்சி பள்ளி-குறிஞ்சி என்ற பெண் தூங்குகிறாள்

ii)குறிஞ்சிப்பள்ளி- தென்னைமரம்

iii) குறிஞ்சிப் பள்ளி-குறிஞ்சி என்ற பள்ளிக்கூடம்


பழமுதிர்சோலை

பழமுதிர்ச்சோலை

இதில் இதில் வரலாற்று இடாமல் எழுதினால் பழங்கள் உதிர்கின்ற சோலை என்று பொருள் படும்.

பழமுதிர்சசோலை-என்று வன்மத்துடன் எழுதினால் முதிர்ந்த பழங்களை உடைய சோலை என்று பொருள் தரும்.


அங்கு சென்றான்

அங்குச் சென்றான்

அங்கு சென்றான் -- என்பதில் வல்லொற்று இடவில்லை என்றால் அங்கு என்ற பெயரை உடைய பையன் சென்றான் என்று பொருளாகி விடும்.

அங்குச் சென்றான் என்று எழுதினால் மட்டுமே அவ்விடத்திற்குச் சென்றார் என்று பொருள் தரும்.

வல்லொற்று மிகும் இடங்கள்:-



1. அ, இ, உ என்னும் சுட்டு எழுத்துகளை அடுத்து வல்லினம் மிகும்

அ + காலம் = அக்காலம் 

இ+ கல்லம் = இக் காலம்

எ + திசை = எத்திசை 


2.அந்த, இந்த ,எந்த என்ற சொற்களின் பின் வல்லினம் மிகும்

அந்த + பையன் = அந்தப் பையன் 

எந்த + பொருள் = எந்தப் பொருள் 

.

3. அங்கு ,இங்கு, எங்கு என்ற சொற்களின் பின் வல்லினம் மிகும்

அங்கு + கண்டான் = அங்குக் கண்டான் 

எங்கு + போனான் = எங்குப் போனான் 


4. அப்படி, இப்படி, எப்படி என்ற சொற்களின் பின் வல்லினம் மிகும்

அப்படி + சொல் = அப்படிச் சொல் 

இப்படி + செய்= இப்படிச் செய்

எப்படி + சொல்வான் = எப்படிச் சொல்வான் 


5. ஓர் எழுத்துச் சொற்களின் முன் வல்லினம் மிகும்

கை + குழந்தை = கைக்குழந்தை 

தை + பொங்கல் = தைப்பொங்கல் 


6. வன்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகும்

பாக்கு + தோப்பு = பாக்குத் தோப்பு

அச்சு + புத்தகம் = அச்சுப்புத்தகம் 

எட்டு + தொகை = எட்டுத்தொகை 

பத்து + பாட்டு = பத்துப்பாட்டு 


7. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்துப் பெயர்ச்சொல் வந்தால் வல்லினம் மிகும்.

கன்று + குட்டி = கன்றுக்குட்டி  

மருந்து + சீட்டு = மருந்துச் சீட்டு 


8. சில உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்

விறகு + கடை = விறகுக்கடை 

படகு + போட்டி = படகுப்போட்டி 

பரிசு + புத்தகம் = பரிசுப்புத்தகம் 

மரபு + கவிதை = மரபுக்கவிதை


9. முற்றியலுகரச்(உகரம் முழுமையாக ஒலிக்கும் ) சொற்கள் முன் வல்லினம் மிகும்.

நடு + கடல் = நடுக்கடல் 

பொது + தேர்வு = பொதுத் தேர்வு

பொது + பணி = பொதுப்பணி 

பசு + தோல் = பசுத்தோல் 

திரு + கோயில் = திருக்கோயில் 

தெரு + பக்கம் = தெருப்பக்கம் 

உணவு + பொருள் = உணவுப்பொருள் 

உழவு + தொழில் = உழவுத்தொழில் 

நெசவு + தொழிலாளி = நெசவுத்தொழிலாளி 

தேர்வு + கட்டணம் = தேர்வுக்கட்டணம்


10. வேற்றுமை உருபு விரிந்து வருவது. இது வேற்றுமை விரி எனப்படும்.

இரண்டாம் வேற்றுமை விரியின் (ஐ உருபின்) முன் வரும் வல்லினம் மிகும்.

தந்தையை + பார்= தந்தையைப் பார்

அவளை + பார் = அவளைப்பார் 

அவனை +பார் அவனைப் பார்

பாயை + சுருட்டு = பாயைச் சுருட்டு 

கதவை + தட்டு = கதவைத் தட்டு 

மலரை + பறி = மலரைப் பறி


11. நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.

எனக்கு + கொடு = எனக்குக் கொடு 

ஊருக்கு + போனான் = ஊருக்குப் போனான்


12. நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாயின் அதன்முன் வரும் வல்லினம் மிகும்.

குறிஞ்சி + தலைவன் = குறிஞ்சித் தலைவன்  (குறிஞ்சிக்குத் தலைவன்) 

படை + தளபதி = படைத்தளபதி (படைக்குத் தளபதி) 


13. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

தயிர் + குடம் = தயிர்க்குடம் (தயிரை உடைய குடம்) 

நகை + கடை = நகைக்கடை (நகையை விற்கும் கடை) 


14. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

இரும்பு + பெட்டி = இரும்புப் பெட்டி (இரும்பினால் ஆகிய பெட்டி)

தேங்காய் + சட்னி = தேங்காய்ச் சட்னி (தேங்காயால் ஆன சட்னி)


15. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் பெரும்பாலும் மிகும்.

கோழி + தீவனம் = கோழித் தீவனம் (கோழிக்கு உரிய தீவனம்) 

குழந்தை + பால் = குழந்தைப் பால் (குழந்தைக்கு ஏற்ற பால்)


16. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

வாய் + பாட்டு = வாய்ப்பாட்டு (வாயிலிருந்து வரும் பாட்டு) 

கனி + சாறு = கனிச்சாறு (கனியிலிருந்து எடுக்கப்படும் சாறு


17. ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாய் இருப்பின், அதன் முன்னர் வரும் வல்லினம் மிகும்.

கிளி + கூண்டு = கிளிக்கூண்டு 

வாழை + தண்டு = வாழைத்தண்டு 


18. பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

சிவப்பு + துணி = சிவப்புத்துணி 

புதுமை + பெண் = புதுமைப்பெண் 


19இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள் 

வெள்ளி + கிழமை = வெள்ளிக் கிழமை 

மல்லிகை + பூ = மல்லிகைப்பூ 


20.உவமைத் தொகையில் வரும் வல்லினம்மிகும்.

மலர் + கண் = மலர்க்கண் (மலர் போன்ற கண்) 

தாமரை + கை = தாமரைக்கை (தாமரை போன்ற கை)


21. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்

செல்லா + காசு = செல்லாக் காசு (செல்லாத காசு)


20. அகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகல்

வர + சொன்னான் = வரச் சொன்னான் 

உண்ண + போனான் = உண்ணப் போனான் 

உட்கார + பார்த்தான் = உட்காரப் பார்த்தான்


21. இகர ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகல்

ஓடி + போனான் = ஓடிப் போனான் 

தேடி + பார்த்தான் = தேடிப் பார்த்தான் 

கூறி + சென்றான் = கூறிச் சென்றான் 

கூடி + பேசினர் = கூடிப் பேசினர்


22.யகர மெய் ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகல்

போய் + பார்த்தான் = போய்ப் பார்த்தான்


23.குறிப்பு பெயரெச்சத்தில்  வல்லினம் மிகும்.

இனிக்க + பேசுவான் = இனிக்கப் பேசுவான் 

நன்றாக + சொன்னான் = நன்றாகச் சொன்னான் 

வேகமாக + கூறினான் = வேகமாகக் கூறினான் 

விரைவாய் + பேசினார் = விரைவாய்ப் பேசினார் .


24. ய்,ர்,ழ் ஆகிய மெய்களைத் தொடர்ந்து பெயர்ச்சொல் வந்தால் வல்லினம் மிகும்.

வாய் + சொல் = வாய்ச் சொல்

மலர் + கூந்தல் = மலர்க் கூந்தல்

தமிழ் + செல்வி = தமிழ்ச் செல்வி




வல்லினம் மிகா இடங்கள்

                              வல்லினம் மிகா இடங்கள்

                            இரண்டு சொற்களுக்கு இடையில் எங்கெல்லாம்  க், ச், த் , ப் ஆகிய வல்லின மெய் எழுத்துக்கள் வராதோ அவ்விடங்களை வல்லினம் மிகும் இடங்கள் ஆகும்.

   1. ‘அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு’ - என்னும்              சொற்களின் பின்வரும் வல்லினம் மிகாது.

அவ்வளவு + பெரிது = அவ்வளவுபெரிது

இவ்வளவு + கனிவா = இவ்வளவு கனிவா?

எவ்வளவு + தொலைவு = எவ்வளவு தொலைவு?


2.  ‘அத்தனை, இத்தனை, எத்தனை’ - என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது.

அத்தனை + புத்தகங்கள் = அத்தனை புத்தகங்கள்

இத்தனை + தொழில்களா = இத்தனை தொழில்களா?

எத்தனை + கருவிகள் = எத்தனை கருவிகள்?


3. ‘அஃறிணைப் பன்மை’ முன் வரும் வல்லினம் மிகாது.

பல + பசு = பல பசு

சில + கலை = சில கலை

அவை + தவித்தன = அவை தவித்தன


4. வினாப் பொருள் உணர்த்தும் ஆ, ஓ, ஏ என்னும் வினா எழுத்துகளின் பின்வரும் வல்லினம் மிகாது.

அவனா + கேட்டான் = அவனா கேட்டான்?

அவளா + சொன்னாள் = அவளா சொன்னாள்?

யாரே + கண்டார் = யாரே கண்டார்?


. வியங்கோள் வினைமுற்றுகளின் பின் வல்லினம் மிகாது.

கற்க + கசடற = கற்க கசடற

வெல்க + தமிழ் = வெல்க தமிழ்

வீழ்க + தண்புனல் = வீழ்க தண்புனல்


6. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் தவிர, மற்றப் பெயரெச்சங்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகாது.

பெரிய + பெண் = பெரிய பெண்

கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்

அழியாத + கல்வி = அழியாத கல்வி


7. ‘எட்டு, பத்து’ ஆகியவை தவிர மற்ற எண்ணுப்பெயர்களின் பின்வரும் வல்லினம் மிகாது.

ஒன்று + கேள் = ஒன்று கேள்

இரண்டு + புத்தகம் = இரண்டு புத்தகம்

மூன்று + குறிக்கோள் = மூன்று குறிக்கோள்

நான்கு + பேர் = நான்கு பேர்

ஐந்து + கதைகள் = ஐந்து கதைகள்

ஆறு + கோவில் = ஆறு கோவில்

ஏழு + சான்றுகள் = ஏழு சான்றுகள்

ஒன்பது + சுவைகள் = ஒன்பது சுவைகள்


8. ‘இரட்டைக் கிளவியிலும், அடுக்குத் தொடரிலும்’ வல்லினம் மிகாது.

கல + கல = கலகல

சட + சட = சடசட - இரட்டைக் கிளவிகள்

பள + பள = பளபள

தீ + தீ = தீதீ

பார் + பார் = பார்பார் ! – அடுக்குத்தொடர்கள்


9. ‘ஏவல் வினை’ முன் வரும் வல்லினம் மிகாது.

வா + கலையரசி = வா கலையரசி

எழு + தம்பி = எழு தம்பி


10. ‘மூன்றாம் வேற்றுமை உருபுகளாகிய ஒடு, ஓடு’ ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.

கோவலனொடு + கண்ணகி வந்தாள் = கோவலனொடு கண்ணகி 

வந்தாள்.

துணிவோடு + செல்க = துணிவோடு செல்க.

அண்ணனோடு + தங்கை வந்தாள் = அண்ணனோடு தங்கை வந்தாள்


11. “பொதுப் பெயர், உயர்திணைப் பெயர்களுக்குப்” பின்வரும் வல்லினம் மிகாது.

தாய் + கண்டாள் = தாய் கண்டாள்.

கண்ணகி + சீறினாள் = கண்ணகி சீறினாள்.


12. ‘ஐந்தாம் வேற்றுமையின் சொல் உருபுகளான இருந்து, நின்று’ என்பவைகளின் பின் வரும் வல்லினம் மிகாது.


மாடியிலிருந்து + கண்டேன் = மாடியிலிருந்து கண்டேன்.

மரத்திலிருந்து + பறித்தேன் = மரத்திலிருந்து பறித்தேன்.



13. “வினைத் தொகையில்” வல்லினம் மிகாது.

விரி + சுடர் = விரிசுடர்

பாய் + புலி = பாய்புலி


14. “உம்மைத் தொகையில்” வல்லினம் மிகாது.

காய் + கனி = காய்கனி

தாய் + தந்தை = தாய்தந்தை


15. ‘அது, இது’ என்னும் சுட்டுகளின் பின் வல்லினம் மிகாது.

அது + பறந்தது = அது பறந்தது.

இது + கடித்தது = இது கடித்தது.


16. ‘விளித் தொடரில்’ வல்லினம் மிகாது.

கண்ணா + பாடு = கண்ணா பாடு.

அண்ணா + கேள் = அண்ணா கேள் !


17. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் ‘கள், தல்’ என்னும் விகுதிகள் வரும் பொழுது வல்லினம் மிகாது.

எழுத்து + கள் = எழுத்துகள்

கருத்து + கள் = கருத்துகள்

வாழ்த்து + கள் = வாழ்த்துகள்


18. ‘இரண்டு வட சொற்கள்’ சேரும் பொழுது வல்லினம் மிகாது.

கோஷ்டி + கானம் = கோஷ்டி கானம்

சங்கீத + சபா = சங்கீத சபா