பத்தாம் வகுப்பு
தமிழ்ச்சொல் வளம்
பின்வரும் பலவுள் தெரிவு வினாக்களுக்கு விடை எழுது
1,.நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர்
அ) பாரதிதாசன் ஆ) பாரதியார் இ) கவிமணி ஈ) தேவநேயப்பாவாணர்
2.இலக்கிய செம்மொழிகளுக்குப் பொதுவானது
அ) சொல் வளம் ஆ) பொருள் வளம் இ) கற்பனைவளம் ஈ) உவமை
3.தமிழ் அல்லாத திராவிட மொழிகளில் இல்லாதது.
அ) பன்மொழி ஆ)இலக்கணம் இ) ஒரு பொருட் பல சொல் ஈ) இலக்கியம்
4. கால்டுவெல் எழுதிய நூல்
அ) கனிச்சாறு ஆ) கண்ணகி காப்பியம் இ) திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்
ஈ) கண்ணகி புரட்சிக் காப்பியம்
5.நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடி பகுதியைக் குறிப்பது
அ) தண்டு ஆ) கோல் இ) தூறு ஈ) தாள்
6.தட்டு அல்லது தட்டை என்பது -----------தாவரத்தின் அடிப்பகுதியை குறிக்கும்.
அ) கரும்பு ஆ) புளி ,வேம்பு இ) கீரை ,வாழை ஈ) கம்பு ,சோளம்
7.சினையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும் ?
அ) போத்து ஆ) கொப்பு இ) குச்சி ஈ) இணுக்கு
8.வெங்கழி என்பது
அ) காய்ந்த குச்சி ஆ) காய்ந்த சிறுகிளை இ) காய்ந்த கழி ஈ) காய்ந்த கொம்பும் கவையும்
அடியும்
9. சோளம் ,கரும்பு முதலியவற்றின் இலை
அ) தோகை ஆ) இலை இ) தாள் ஈ) சண்டு
10.பூ விரியத் தொடங்கும் நிலை
அ) அரும்பு ஆ) போது இ) வீ ஈ) செம்மல்
11. தமிழ் திரு. இரா. இளங்குமரனார் உருவாக்கியது ------------
அ) திருவள்ளுவர் நூலகம் ஆ) கம்பர் நூலகம் இ) பாவாணர் நூலகம் ஈ) இளங்கோ நூலகம்
12.கோல் என்பது------------ பெயர்.
அ) கிளைப்பிரிவு ஆ) இலை வகை இ) அடி வகை ஈ) கொழுந்து வகை
13.கரும்பின் அடி -----------
அ) கழி ஆ) கழை இ) அடி ஈ) தட்டு
14. இணுக்கு என்பது -----------
அ) கவையின் பிரிவு ஆ) சினையின் பிரிவு இ) போத்தின் பிரிவு ஈ) குச்சியின் பிரிவு
15.காய்ந்த கொம்பும், கவையும் அடியும்-------
அ) சுள்ளி ஆ) கட்டை இ) விறகு ஈ) வெங்கழி
16.செம்மல் என்பது ---------
அ) அரும்பு ஆ) செடியின் கிளை இ) பூ வாடின நிலை ஈ) பூவின் தோற்ற நிலை
17.கரும்பின் நுனிப்பகுதி---------
அ) துளிர் ஆ) கொழுந்தடை இ) குருத்து ஈ) முறி
18.தாவரங்களின் இலை வகைகளை குறிக்கும் சொற்களுள் பொருந்தாத ஒன்று--------
அ) தாள் ஆ) ஓலை இ) சருகு ஈ) தளிர்
19. தண்டு என்பது ---------அடி.
அ) நெல் ,கேழ்வரகு ஆ) நெட்டி ,மிளகாய் இ) கீரை, வாழை ஈ) புளி ,வேம்பு
20. இளங்குமரனார் எழுதிய நூல்களுள் ஒன்று .
அ) சிலப்பதிகார உரை ஆ) குண்டலகேசி உரை இ) மணிமேகலை உரை ஈ)சீவகசிந்தாமணி உரை
No comments:
Post a Comment