Friday, September 17, 2021

வல்லினம் மிகா இடங்கள்

                              வல்லினம் மிகா இடங்கள்

                            இரண்டு சொற்களுக்கு இடையில் எங்கெல்லாம்  க், ச், த் , ப் ஆகிய வல்லின மெய் எழுத்துக்கள் வராதோ அவ்விடங்களை வல்லினம் மிகும் இடங்கள் ஆகும்.

   1. ‘அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு’ - என்னும்              சொற்களின் பின்வரும் வல்லினம் மிகாது.

அவ்வளவு + பெரிது = அவ்வளவுபெரிது

இவ்வளவு + கனிவா = இவ்வளவு கனிவா?

எவ்வளவு + தொலைவு = எவ்வளவு தொலைவு?


2.  ‘அத்தனை, இத்தனை, எத்தனை’ - என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது.

அத்தனை + புத்தகங்கள் = அத்தனை புத்தகங்கள்

இத்தனை + தொழில்களா = இத்தனை தொழில்களா?

எத்தனை + கருவிகள் = எத்தனை கருவிகள்?


3. ‘அஃறிணைப் பன்மை’ முன் வரும் வல்லினம் மிகாது.

பல + பசு = பல பசு

சில + கலை = சில கலை

அவை + தவித்தன = அவை தவித்தன


4. வினாப் பொருள் உணர்த்தும் ஆ, ஓ, ஏ என்னும் வினா எழுத்துகளின் பின்வரும் வல்லினம் மிகாது.

அவனா + கேட்டான் = அவனா கேட்டான்?

அவளா + சொன்னாள் = அவளா சொன்னாள்?

யாரே + கண்டார் = யாரே கண்டார்?


. வியங்கோள் வினைமுற்றுகளின் பின் வல்லினம் மிகாது.

கற்க + கசடற = கற்க கசடற

வெல்க + தமிழ் = வெல்க தமிழ்

வீழ்க + தண்புனல் = வீழ்க தண்புனல்


6. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் தவிர, மற்றப் பெயரெச்சங்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகாது.

பெரிய + பெண் = பெரிய பெண்

கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்

அழியாத + கல்வி = அழியாத கல்வி


7. ‘எட்டு, பத்து’ ஆகியவை தவிர மற்ற எண்ணுப்பெயர்களின் பின்வரும் வல்லினம் மிகாது.

ஒன்று + கேள் = ஒன்று கேள்

இரண்டு + புத்தகம் = இரண்டு புத்தகம்

மூன்று + குறிக்கோள் = மூன்று குறிக்கோள்

நான்கு + பேர் = நான்கு பேர்

ஐந்து + கதைகள் = ஐந்து கதைகள்

ஆறு + கோவில் = ஆறு கோவில்

ஏழு + சான்றுகள் = ஏழு சான்றுகள்

ஒன்பது + சுவைகள் = ஒன்பது சுவைகள்


8. ‘இரட்டைக் கிளவியிலும், அடுக்குத் தொடரிலும்’ வல்லினம் மிகாது.

கல + கல = கலகல

சட + சட = சடசட - இரட்டைக் கிளவிகள்

பள + பள = பளபள

தீ + தீ = தீதீ

பார் + பார் = பார்பார் ! – அடுக்குத்தொடர்கள்


9. ‘ஏவல் வினை’ முன் வரும் வல்லினம் மிகாது.

வா + கலையரசி = வா கலையரசி

எழு + தம்பி = எழு தம்பி


10. ‘மூன்றாம் வேற்றுமை உருபுகளாகிய ஒடு, ஓடு’ ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.

கோவலனொடு + கண்ணகி வந்தாள் = கோவலனொடு கண்ணகி 

வந்தாள்.

துணிவோடு + செல்க = துணிவோடு செல்க.

அண்ணனோடு + தங்கை வந்தாள் = அண்ணனோடு தங்கை வந்தாள்


11. “பொதுப் பெயர், உயர்திணைப் பெயர்களுக்குப்” பின்வரும் வல்லினம் மிகாது.

தாய் + கண்டாள் = தாய் கண்டாள்.

கண்ணகி + சீறினாள் = கண்ணகி சீறினாள்.


12. ‘ஐந்தாம் வேற்றுமையின் சொல் உருபுகளான இருந்து, நின்று’ என்பவைகளின் பின் வரும் வல்லினம் மிகாது.


மாடியிலிருந்து + கண்டேன் = மாடியிலிருந்து கண்டேன்.

மரத்திலிருந்து + பறித்தேன் = மரத்திலிருந்து பறித்தேன்.



13. “வினைத் தொகையில்” வல்லினம் மிகாது.

விரி + சுடர் = விரிசுடர்

பாய் + புலி = பாய்புலி


14. “உம்மைத் தொகையில்” வல்லினம் மிகாது.

காய் + கனி = காய்கனி

தாய் + தந்தை = தாய்தந்தை


15. ‘அது, இது’ என்னும் சுட்டுகளின் பின் வல்லினம் மிகாது.

அது + பறந்தது = அது பறந்தது.

இது + கடித்தது = இது கடித்தது.


16. ‘விளித் தொடரில்’ வல்லினம் மிகாது.

கண்ணா + பாடு = கண்ணா பாடு.

அண்ணா + கேள் = அண்ணா கேள் !


17. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் ‘கள், தல்’ என்னும் விகுதிகள் வரும் பொழுது வல்லினம் மிகாது.

எழுத்து + கள் = எழுத்துகள்

கருத்து + கள் = கருத்துகள்

வாழ்த்து + கள் = வாழ்த்துகள்


18. ‘இரண்டு வட சொற்கள்’ சேரும் பொழுது வல்லினம் மிகாது.

கோஷ்டி + கானம் = கோஷ்டி கானம்

சங்கீத + சபா = சங்கீத சபா


No comments:

Post a Comment