Friday, September 17, 2021

வல்லினம் மிகும் இடங்கள்

 வல்லினம் மிகும் இடங்கள்


இரண்டு சொற்களுக்கு இடையில் எங்கெல்லாம் க், ச், த், ப் ஆகிய வல்லெழுத்துக்கள் வருமோ அவ்விடங்களை வல்லினம் மிகும் இடம் என்று அழைக்கின்றோம் வல்லெழுத்து வர வேண்டிய இடங்களில் வல்லொற்று இடவில்லை என்றால் பொருளே மாறிவிடும்

எடுத்துக்காட்டாக கீழே உள்ள தொடரைப் பாருங்கள்....


குறிஞ்சி     பள்ளி

குறிஞ்சிப்பள்ளி

குறிஞ்சிப் பள்ளி

மேற்கண்ட மூன்று தொடர்களும் ஒரே போல் இருந்தாலும் மூன்றும் வெவ்வேறு பொருளைத் தருகின்றது.

i) குறிஞ்சி பள்ளி-குறிஞ்சி என்ற பெண் தூங்குகிறாள்

ii)குறிஞ்சிப்பள்ளி- தென்னைமரம்

iii) குறிஞ்சிப் பள்ளி-குறிஞ்சி என்ற பள்ளிக்கூடம்


பழமுதிர்சோலை

பழமுதிர்ச்சோலை

இதில் இதில் வரலாற்று இடாமல் எழுதினால் பழங்கள் உதிர்கின்ற சோலை என்று பொருள் படும்.

பழமுதிர்சசோலை-என்று வன்மத்துடன் எழுதினால் முதிர்ந்த பழங்களை உடைய சோலை என்று பொருள் தரும்.


அங்கு சென்றான்

அங்குச் சென்றான்

அங்கு சென்றான் -- என்பதில் வல்லொற்று இடவில்லை என்றால் அங்கு என்ற பெயரை உடைய பையன் சென்றான் என்று பொருளாகி விடும்.

அங்குச் சென்றான் என்று எழுதினால் மட்டுமே அவ்விடத்திற்குச் சென்றார் என்று பொருள் தரும்.

வல்லொற்று மிகும் இடங்கள்:-



1. அ, இ, உ என்னும் சுட்டு எழுத்துகளை அடுத்து வல்லினம் மிகும்

அ + காலம் = அக்காலம் 

இ+ கல்லம் = இக் காலம்

எ + திசை = எத்திசை 


2.அந்த, இந்த ,எந்த என்ற சொற்களின் பின் வல்லினம் மிகும்

அந்த + பையன் = அந்தப் பையன் 

எந்த + பொருள் = எந்தப் பொருள் 

.

3. அங்கு ,இங்கு, எங்கு என்ற சொற்களின் பின் வல்லினம் மிகும்

அங்கு + கண்டான் = அங்குக் கண்டான் 

எங்கு + போனான் = எங்குப் போனான் 


4. அப்படி, இப்படி, எப்படி என்ற சொற்களின் பின் வல்லினம் மிகும்

அப்படி + சொல் = அப்படிச் சொல் 

இப்படி + செய்= இப்படிச் செய்

எப்படி + சொல்வான் = எப்படிச் சொல்வான் 


5. ஓர் எழுத்துச் சொற்களின் முன் வல்லினம் மிகும்

கை + குழந்தை = கைக்குழந்தை 

தை + பொங்கல் = தைப்பொங்கல் 


6. வன்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகும்

பாக்கு + தோப்பு = பாக்குத் தோப்பு

அச்சு + புத்தகம் = அச்சுப்புத்தகம் 

எட்டு + தொகை = எட்டுத்தொகை 

பத்து + பாட்டு = பத்துப்பாட்டு 


7. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்துப் பெயர்ச்சொல் வந்தால் வல்லினம் மிகும்.

கன்று + குட்டி = கன்றுக்குட்டி  

மருந்து + சீட்டு = மருந்துச் சீட்டு 


8. சில உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் முன் வல்லினம் மிகல்

விறகு + கடை = விறகுக்கடை 

படகு + போட்டி = படகுப்போட்டி 

பரிசு + புத்தகம் = பரிசுப்புத்தகம் 

மரபு + கவிதை = மரபுக்கவிதை


9. முற்றியலுகரச்(உகரம் முழுமையாக ஒலிக்கும் ) சொற்கள் முன் வல்லினம் மிகும்.

நடு + கடல் = நடுக்கடல் 

பொது + தேர்வு = பொதுத் தேர்வு

பொது + பணி = பொதுப்பணி 

பசு + தோல் = பசுத்தோல் 

திரு + கோயில் = திருக்கோயில் 

தெரு + பக்கம் = தெருப்பக்கம் 

உணவு + பொருள் = உணவுப்பொருள் 

உழவு + தொழில் = உழவுத்தொழில் 

நெசவு + தொழிலாளி = நெசவுத்தொழிலாளி 

தேர்வு + கட்டணம் = தேர்வுக்கட்டணம்


10. வேற்றுமை உருபு விரிந்து வருவது. இது வேற்றுமை விரி எனப்படும்.

இரண்டாம் வேற்றுமை விரியின் (ஐ உருபின்) முன் வரும் வல்லினம் மிகும்.

தந்தையை + பார்= தந்தையைப் பார்

அவளை + பார் = அவளைப்பார் 

அவனை +பார் அவனைப் பார்

பாயை + சுருட்டு = பாயைச் சுருட்டு 

கதவை + தட்டு = கதவைத் தட்டு 

மலரை + பறி = மலரைப் பறி


11. நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.

எனக்கு + கொடு = எனக்குக் கொடு 

ஊருக்கு + போனான் = ஊருக்குப் போனான்


12. நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாயின் அதன்முன் வரும் வல்லினம் மிகும்.

குறிஞ்சி + தலைவன் = குறிஞ்சித் தலைவன்  (குறிஞ்சிக்குத் தலைவன்) 

படை + தளபதி = படைத்தளபதி (படைக்குத் தளபதி) 


13. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

தயிர் + குடம் = தயிர்க்குடம் (தயிரை உடைய குடம்) 

நகை + கடை = நகைக்கடை (நகையை விற்கும் கடை) 


14. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

இரும்பு + பெட்டி = இரும்புப் பெட்டி (இரும்பினால் ஆகிய பெட்டி)

தேங்காய் + சட்னி = தேங்காய்ச் சட்னி (தேங்காயால் ஆன சட்னி)


15. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் பெரும்பாலும் மிகும்.

கோழி + தீவனம் = கோழித் தீவனம் (கோழிக்கு உரிய தீவனம்) 

குழந்தை + பால் = குழந்தைப் பால் (குழந்தைக்கு ஏற்ற பால்)


16. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும்.

வாய் + பாட்டு = வாய்ப்பாட்டு (வாயிலிருந்து வரும் பாட்டு) 

கனி + சாறு = கனிச்சாறு (கனியிலிருந்து எடுக்கப்படும் சாறு


17. ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாய் இருப்பின், அதன் முன்னர் வரும் வல்லினம் மிகும்.

கிளி + கூண்டு = கிளிக்கூண்டு 

வாழை + தண்டு = வாழைத்தண்டு 


18. பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

சிவப்பு + துணி = சிவப்புத்துணி 

புதுமை + பெண் = புதுமைப்பெண் 


19இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள் 

வெள்ளி + கிழமை = வெள்ளிக் கிழமை 

மல்லிகை + பூ = மல்லிகைப்பூ 


20.உவமைத் தொகையில் வரும் வல்லினம்மிகும்.

மலர் + கண் = மலர்க்கண் (மலர் போன்ற கண்) 

தாமரை + கை = தாமரைக்கை (தாமரை போன்ற கை)


21. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்

செல்லா + காசு = செல்லாக் காசு (செல்லாத காசு)


20. அகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகல்

வர + சொன்னான் = வரச் சொன்னான் 

உண்ண + போனான் = உண்ணப் போனான் 

உட்கார + பார்த்தான் = உட்காரப் பார்த்தான்


21. இகர ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகல்

ஓடி + போனான் = ஓடிப் போனான் 

தேடி + பார்த்தான் = தேடிப் பார்த்தான் 

கூறி + சென்றான் = கூறிச் சென்றான் 

கூடி + பேசினர் = கூடிப் பேசினர்


22.யகர மெய் ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகல்

போய் + பார்த்தான் = போய்ப் பார்த்தான்


23.குறிப்பு பெயரெச்சத்தில்  வல்லினம் மிகும்.

இனிக்க + பேசுவான் = இனிக்கப் பேசுவான் 

நன்றாக + சொன்னான் = நன்றாகச் சொன்னான் 

வேகமாக + கூறினான் = வேகமாகக் கூறினான் 

விரைவாய் + பேசினார் = விரைவாய்ப் பேசினார் .


24. ய்,ர்,ழ் ஆகிய மெய்களைத் தொடர்ந்து பெயர்ச்சொல் வந்தால் வல்லினம் மிகும்.

வாய் + சொல் = வாய்ச் சொல்

மலர் + கூந்தல் = மலர்க் கூந்தல்

தமிழ் + செல்வி = தமிழ்ச் செல்வி




No comments:

Post a Comment