Tuesday, July 30, 2019

தமிழ்ச் சான்றோர்களின் அணிந்துரை ...

போதிமரத் தேடல் ...


தமிழ்ச்சான்றோர்களின் அணிந்துரை......
                                           
                 முனைவர் ஹரி விஜயலட்சுமி
                                                                                                           முதல்வர்
                  ஜெ .பீ. கலை மற்றும்           அறிவியல்  கல்லூரி
                        ஆய்க்குடி (2014)


இரசனையுள்ள ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும் ...
ஒரு கவிஞன் இருக்கின்றான் ...

அன்றாட நிகழ்வுகளும்
அவை சார்ந்த பார்வைகளும் ..
ஏற்படுத்தும் தாக்கம் தான்
கவிதையின் அடித்தளம் ..

கற்பனை பூச்சோடு
அலங்காரமாய் ஒளிரும்
கவிதைகளிலும் கூட
நிதர்சனத்தின் ஊற்றுக்கண்
ஒளிந்திருக்கும் .

பேராசிரியர் பொன் தாமோதரன்
நல்ல சிந்தனையாளர்...
 கவிஞர் ....
ஆசிரியர் பணியில் ......
தம்மை கரைத்துக் கொண்டவர்.

 இப்பணி சார்ந்த
தன் அனுபவங்களைக்
கவிதைகளாக வடித்திருக்கின்றார்.

 உடன்பாட்டுச் சிந்தனையுடைய
ஒரு ஆசிரியர் மட்டுமே
மாணவனிடம் உள்ளார்ந்திருக்கும்
திறமைகளை ஒளிர வைக்க முடியும்...
 என்ற கருத்து
இக் கவிதைகளின் அடிநாதமாக
ஒலிக்கின்றது ...

நம் கல்விச் சூழல் பற்றிய
விமர்சனமும் கவிதைகளில்
மறைபொருளாக ஒலிக்கின்றது ...

தண்டனைகளால் ஒடித்துப் போடுவதைவிட
அன்பான சொற்களால் ...
மாணவனை வளைத்து ..
வளப்படுத்துவதே ஆசிரியரின் தலையாய கடமை
என்பது ஆசிரியரின் தீர்க்கமான கருத்து..

 ஒவ்வொரு கவிதைக்கும்
இணையான ஆங்கில வடிவத்தையும்
 தருகின்ற புது முயற்சியையும்
கவிஞர் மேற்கொண்டிருக்கின்றார் .
நல்ல சிந்தனைகள்
அனைவரையும் சென்றடைய
மொழியாக்கம் பாலமாக அமைகின்றது
 பேராசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது ..
                         

----------------------'--___------'z-----------'

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின்
முன்னாள் இயக்குநர்
முனைவர் ச.வே.சுப்பிரமணியம் அய்யா
அவர்களின் வாழ்த்துரை .......

.நண்பர் பொன் தாமோதரன்
எழுதியுள்ள ஆசிரியர் மாணாக்கர் பற்றிய  போதி மரத் தேடல் 
என்னும் நூலைப் படித்துப் பெரிதும் மகிழ்ந்தேன் .
அவர் சிறந்த கவிஞர் மட்டுமல்ல;
சிறந்த ஆசிரியராகவும் அவருடைய
நூல் வழி அறிய முடிகிறதுகிறது .
ஆசிரியப்பணி பற்றிய
உன்னதமான எண்ணம் இருப்பதால் தான்
இது போன்ற கவிதைகள்
அவரிடம் தோன்றுகின்றன .
                சட்டத்தால்
                 தலைவர்களால் 
                   அரசால் .......
                     முடியாத சமூக மாற்றம்
                  ஆசிரியர்களால்
                     சாத்தியமாகும் ......
இதில் பொதிந்துள்ள கருத்து மிகுந்த உண்மையாகும் .
நல்லாசிரியர் என்னும் சிற்பிகளால் தான்
 தலை சிறந்த சமுதாயம் படைக்கப் படும் என்பதில் ஐயமில்லை .
ஒரு ஆசிரியர் தன் மாணாக்கரை எவ்வாறு நினைக்க வேண்டும்?
 என்பதைப் பற்றி ஒரு கவிதை .....
         ஆரம்ப பள்ளி மாணவர்களை
          உங்கள் குழந்தைகளைப் போல
            நடத்துங்கள் ......
            மேல்நிலைப் பள்ளி மாணவர்களை
            தோழர்களாக நடத்துங்கள் ....
           கல்லூரி மாணவர்களை
          மன்னர்களாக நடத்துங்கள்...
         மாணாக்கர்கள் பற்றிய உயர்ந்த எண்ணம்
       பாராட்டத்தக்கது.
         அனைத்திற்கும் அடிப்படையாக அமைவது
      மனம் தான் .அதைப் பற்றியும் கூறுகிறார் .....


மனம் தான்
மனித வாழ்வை தீர்மானிக்கிறது .
மன வலிமை
மன அமைதி
 மன ஒருமை ....
பயிற்சி அளிப்பதே
மகத்தான கல்வி. ....
என்பதன் மூலம் சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை
 நமக்கு நினைவு படுத்துகிறார் .
குற்றம் செய்யும் மாணவர்களை எவ்வாறு கையாளவேண்டும் ?
அருமையான ஆசிரியர் யார் ? கல்வி எதற்காக?
என்பது போன்ற கேள்விகளுக்கு
 இந்நூல் விடை அளிக்கிறது ..
               தவறு செய்த மாணவரிடம்
                  பெற்றோரை அழைத்து வா
                         கட்டளையிடு வதை விட
                     தானே பெற்றோராகி ..
                       தனிமையில் அறிவுரை வழங்குபவரே
                       அருமையான ஆசிரியர் ......
ஆம்.அனைத்து கவிதைகளும் சிறப்பாக அமைந்துள்ளன .
எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும் படிக்க வேண்டிய சிறந்த நூல் .
நூலாசிரியரைப்   பாராட்டி மகிழ்கிறேன் .
இன்னும் இதுபோன்ற நல்ல நூல்கள்
பலவற்றை அவர் உருவாக்க வேண்டும் என கேட்டு வாழ்த்துகிறேன்.

                                        --------------------------------'


                       Rev.Sr.T.ROJAMARY
                     COLLEGE  INCHARGE,
                    J.P.COLLAGE OF ARTS &Science,
                   AYIKUdy.

-------------------                      ------------------------------

Dear Readers,
        A good teaher is one who is able  to bond with his /her students  ,to understand and to resonate  with their feelings and emotions...

          A good teacher has a positive  mental attitude,is flexible and is open to change.

      A good teacher should also be a role model to their students .

A good teacher is someone they can use patience  with their students. They are willing to go over and beyond to help their students.

A good teacher is someone who is organized ,loving ,nurturing ,creative and enjoys helping others .

A good teacher shows concern for her students.

 I. have recognized all these good qualities in Mr .pon.Damodaran ,lecturer in the Department of Tamil in our JP College of Arts and Science .

He is able to turn clay into beautiful  pots .

My sincere prayers and blessings for enthusiastic effort in bringing out this meaningful and thoughtful book .I wish him all the best.


No comments:

Post a Comment